பாகிஸ்தானின் போர்க்கப்பலுடன் இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி
134 மீற்றர் நீளமுள்ள சீனக் கட்டமைக்கப்பட்ட இந்த போர்க்கப்பலில் 169 பேர் பயணிக்கின்றனர்.
இதன் ஊடக அறிக்கையின்படி, கப்பல் ஆகஸ்ட் 15 வரை தீவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தான் கடற்படைக்காக சீனா தயாரித்த போர்க் கப்பல்கள்
மேலும் இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தைமூர், பாகிஸ்தான் கடற்படைக்காக சீனா தயாரித்த நான்கு வகை போர்க் கப்பல்களில் இரண்டாவதாகும். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் அதிக திறன் கொண்ட தைமூரில் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் உணர்திறன்கள் உள்ளன.
மேலும் பல அச்சுறுத்தல் சூழல்களில் போராடுவதற்கான நவீன போர் மேலாண்மை மற்றும்
மின்னணு போர் முறைகள் உள்ளன என்று பாகிஸ்தான் கடற்படை வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan