அனைத்து நாடுகளின் சுற்றுலா பயணிகளையும் வரவேற்க தயாராகும் இலங்கை
எதிர்வரும் நாட்களில் உக்ரேன் சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரமின்றி ஏனைய நாட்டவர்களையும் இலங்கைக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு அவசியமான சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம் தயாரிப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உக்ரேன் நாட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சில குறைப்பாடுகள் இருந்தன.
எங்களால் எப்போதும் நாட்டை முடி வைத்துக் கொண்டு இருக்க முடியுாது. நாங்கள் அந்த குறைப்பாடுகளை அறிந்து கொண்டு அவற்றிற்கு தீர்வு வழங்கி சுற்றுலா துறையை மீண்டும் கட்டியெழுப்புவோம்.
நாங்கள் சரியான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்போம் என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.