ட்ரம்ப் எடுத்த தீர்மானத்தில் சிக்கிய இலங்கை
அமெரிக்காவில் (US) டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம், அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் முடக்கி, புதிய உதவிகளை நிறுத்த முடிவு செய்ததால் பாதிக்கப்படும் நாடுகளில் இலங்கையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, அனைத்து அமெரிக்க இராஜதந்திர பணியாளர்களுக்கும் இது தொடர்பான தகவல்களை அனுப்பியுள்ளார்.
நிதியுதவி அச்சுறுத்தல்
இது, வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனமான யுஎஸ்எய்ட் ஆகியவற்றிலிருந்து உலகளாவிய திட்டங்களுக்கு செல்லும் பில்லியன் கணக்கான டொலர் நிதியுதவிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனைத்து அமெரிக்க வெளிநாட்டு உதவித் திட்டங்களையும் 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக தகவல்படி, 1956 முதல் அமெரிக்கா, இலங்கைக்கு 2 பில்லியன் டொலர்களுக்கு மேல் (கிட்டத்தட்ட ரூ. 720 பில்லியன்) உதவியை வழங்கியுள்ளது.
இந்தநிலையில், ட்ரம்பின் உத்தரவு, அபிவிருத்தி உதவி முதல் உக்ரைனுக்கான இராணுவ உதவி வரை அனைத்தையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
You My Like This Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
