நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
மீண்டும் இலங்கையில் பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள் தலைதூக்கியுள்ளதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
புதிய ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்களே ஆன நிலையில் பல இடங்களில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் கடந்தவாரங்களில் இடம்பெற்ற அக்குரேகொட துப்பாக்கிசூடு மற்றும் ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிசூடு என்பன தற்போது பெரும் பரபரப்பாகவுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிரவிசாரணையை மேற்கொண்டுள்ள நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்,ஜிந்துபிட்டியவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கடமை தவறியதற்காக நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்துவருகின்றது Newsinsights நிகழ்ச்சி...