அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி
அரச வேலைக்கான ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது வெளிப்படைத்தன்மையுடன் தகுதி அடைப்படையில் தெரிவு செய்யும் முறைமை பின்பற்றப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 627 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (06.05.2026)நடைபெற்றிருந்து. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எமது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, முடிந்தவரை அதிகமானோரை சேவையில் சேர்க்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தற்போதுள்ள வெற்றிட எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, ஏறத்தாழ 160,000 பேர் ஏற்கனவே பொதுச்சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரச வேலைக்கான ஆட்சேர்ப்பு
கடந்த காலத்தில், சுகாதாரப் பணியாளர்கள், இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் மற்றும் தொடருந்து திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான ஆட்சேர்ப்புகள் பெரும்பாலும் அரசியல் தலையீட்டின் அடிப்படையிலேயே நடைபெற்றன. சுகாதார அமைச்சில் அரசியல் தலையீடு மிகவும் வெளிப்படையாகத் வெளிப்படும் விடயமாக சுகாதாரப் பணியாளர்களின் ஆட்சேர்ப்பைக் குறிப்பிடலாம்.

தற்போதைய அரசாங்கம் அந்த முறையை முற்றிலுமாக மாற்றி, வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் தகுதிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆட்சேர்ப்பு செயன்முறையை நிறுவியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது, இதற்காக, பகிரங்க விளம்பரங்கள் மூலம் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் சம வாய்ப்புகள் வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது என்றுள்ளார்.
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri