பேச்சுவார்தைக்காக அமெரிக்கா சென்றுள்ள குழு: ஜனாதிபதி கூறிய தகவல்
அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதி நிதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று(20.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உலகை நாம் விரும்பியவாறு கட்டுப்படுத்த முடியாது என்பதோடு ஏனைய நாடுகளின் பொருளாதார தீர்மானங்களில் நாம் செல்வாக்கு செலுத்த முடியாது.
அசைக்க முடியாத ஒரு பொருளாதாரம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதித்ததும் அமெரிக்கர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது அவர் வரிகளை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இது போன்ற எந்தவித தடைகளாலும் அசைக்க முடியாத ஒரு பொருளாதாரத்தை உருவாக்கவே நாம் முயற்சிக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam