எரிபொருளுக்காக காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்! வடமராட்சியில் சம்பவம்
எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென காத்திருந்த மக்களுக்கு மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பெட்ரோல் விநியோகம் இடம்பெறாது என பெயர் பலகையில் அறிவிக்கப்பட்ட நிலையில்,வரிசையில் காத்திருந்த மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
எனினும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் சேந்தன் நிலமையை தெளிவுப்படுத்தியதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

பெட்ரோல் விநியோகம் தடை
இதேவேளை, புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலுக்கு நேற்றிலிருந்து காத்திருந்து நிலையில், யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று வரவேண்டிய பெட்ரோல் பவுசர் அனுராதபுரம் பகுதியில் பழுதடைந்தமையால் பெட்ரோல் விநியோகம் தடைப்பட்டதாகவும், நாளை பெட்ரோல் விநியோகம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,குறித்த
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் காத்திருந்த நூற்றுக்கணக்கான பெட்ரோல்
வாகனங்களுடன் மக்கள் ஏமாற்றமடைந்து சென்றுள்ளனர்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri