எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! இராணுவ சிப்பாய் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் இராணுவ சிப்பாய் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கதுருகசர பொறியியலாளர் படை முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பிலிபிட்டிய, அஞ்சல் 99, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5 நாட்களுக்குப் பின்னர் இன்று வருகை தந்த எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கோபமடைந்த மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவ சிப்பாயின் கடமை நேர துப்பாக்கியை பறிப்பு
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாயுடன் இருவர் மோதலில் ஈடுபட்டுள்ளதுடன், இராணுவ சிப்பாயின் கடமை நேர துப்பாக்கியை பறித்து சென்றுள்ளார்.

இதன்போது மற்றுமொருவர் கூரிய ஆயுதத்தால் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam