எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! இராணுவ சிப்பாய் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் இராணுவ சிப்பாய் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கதுருகசர பொறியியலாளர் படை முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பிலிபிட்டிய, அஞ்சல் 99, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5 நாட்களுக்குப் பின்னர் இன்று வருகை தந்த எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கோபமடைந்த மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவ சிப்பாயின் கடமை நேர துப்பாக்கியை பறிப்பு
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாயுடன் இருவர் மோதலில் ஈடுபட்டுள்ளதுடன், இராணுவ சிப்பாயின் கடமை நேர துப்பாக்கியை பறித்து சென்றுள்ளார்.

இதன்போது மற்றுமொருவர் கூரிய ஆயுதத்தால் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan