எரிபொருள் இறக்குமதி குறித்து அரசாங்கம் முக்கிய தீர்மானம்-செய்திகளின் தொகுப்பு
சர்வதேச நீதி வரையறைக்கு உட்பட்டு ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள பல சுற்றுப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக இலங்கை நேரடியாக பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமின்றி, நிலக்கரி, தானியவகைகள், மற்றும் உரம் ஆகியனவற்றை இறக்குமதி செய்வதிலும் இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான யுத்தத்திற்கு தீர்வு காணப்படுவது அவசியமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
