மூன்று நாட்களுக்குப் பின்னர் தனியார் பேருந்துகளுக்கு இன்று எரிபொருள் விநியோகம்
கடந்த 27ம் திகதியிலிருந்து 28ம் திகதி மதியம் வரை தமக்கு எரிபொருள் வழங்ககோரி பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தனியார் பேருந்துகளுக்கும் டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் டீசல் விநியோகம் இன்றைய தினம் இடம்பெற்றது.
சேவையை வழங்க முடியாத நிலை
இதனை பெற்றுக் கொள்வதற்காக தனியார் பேருந்துகள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக் கொண்டு சென்றனர்.
இதேவேளை பருத்தித்துறை சாலை அத்தியட்சகர் எரிபொருள் விநியோகத்தை உரிய
காலத்தில் மேற்கொள்ளாமையால் உரிய சேவையை வழங்க முடியாதுள்ளதாகவும் இன்றைய
தினம் பருத்தித்துறை கட்டைக்காடு இடையிலான 11 மணி பயணிகள் சேவைகள் இடை
நிறுத்தப்பட்டதாகவும்
வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் தெரிவித்தனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
