மற்றுமொரு உணவுப்பொருளின் விலை அதிகரிப்பு
இலங்கையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 1.9 வீதத்தினால் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற தேங்காய் ஏல விற்பனையின் போது ஆயிரம் தேங்காய்களின் விலை 58,516.87ஆக நிலவியது.
இலங்கை தெங்கு அபிவிருத்தி சபையினால் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் கிடைத்த அதிக விலை 68,000 ரூபாவாகும்.
வருமானம் உயர்வு

ஏற்கனவே அதற்கு முந்திய வாரத்தில் 1,000 தேங்காய்களுக்கு ஏலத்தில் கிடைத்த விலை 63,700ஆக நிலவியது.
இந்நிலையில் இந்த ஏலத்தின் போது 10 இலட்சத்து 18 ஆயிரத்து 186 தேங்காய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதில், 7 இலட்சத்து 6 ஆயிரத்து 9 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதேவேளை, கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் தேங்காய் அடிப்படையிலான பொருட்களின் ஏற்றுமதி 7 சதவீதத்தால் அதிகரித்து அதன் வருமானம் 573 மில்லியன்களாக உயர்ந்துள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 21 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri