யாழ். அனலைதீவு கடற்றொழிலாளர்களால் கையளிக்கப்பட்ட மகஜர்!
உள்ளூர் இழுவைப் படகினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் யாழ். மாவட்டச் செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரை நேற்றைய தினம் (13.03.2023) கையளித்துள்ளதாக அனலைதீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனலைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜோன் பொஸ்கோ, செயலாளர் வே.வின்சன் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச செயலாளர் அ.அன்னராசா ஆகியோர் யாழ். மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுநதரனை சந்தித்து மகஜரை சமர்ப்பித்துள்ளனர்.

அந்த மகஜரில் குருநகர் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால்
உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan