ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வு
14 ஆவது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு நாளை (19.05.2023) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் ரணவிரு சேவா அதிகார சபையானது இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
தேசிய போர்வீரர் நினைவேந்தல்
நிகழ்வை நடத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் போர் வீரர்களை நினைவு கூரும் இந்தவிழா பெருமைக்குரியது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது விசேட போர்ப்பறை இசையும் மலர் அஞ்சலியும் இடம்பெறவுள்ளதாக கமல் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியல் உரைகள்
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் தேசிய போர்வீரர் நினைவேந்தலில் பங்குபற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து பௌத்த மற்றும் பிற மத சடங்குகளும் இங்கு நடத்தப்படுவதுடன் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும். இங்கு முப்படை அணிவகுப்பு நடத்தப்பட்டு இராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட உள்ளனர் எனதெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள போர்வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் உரைகள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
