இலங்கை பஞ்ச மகா நெருக்கடிகளை சந்திக்கும்
எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கை பஞ்ச மகா நெருக்கடிகளை சந்திக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
வர போகும் இந்த நெருக்கடிகள் சம்பந்தமாக நான் தற்போது வெளியில் பேசாது, உள்ளே கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றேன்.
உள்ளே நடத்தப்படும் இந்த கலந்துரையாடலில் தேவையான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றால், வெளியில் பேச தயார்.
நாம் நெருக்கடியின் உச்சத்தில் இல்லை என சில எண்ணினாலும் அது உண்மையல்ல. மார்ச் மாதமளவில் இந்த நெருக்கடிகள் உச்சத்தை எட்டும். அந்த நெருக்கடிகள் அரசியலின் திசையை முடிவு செய்யும் எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam