கோட்டாபயவினால் தப்பிய மோசடி அரசியல்வாதியை கைது செய்ய தயாராகும் அநுர அரசு
கடந்த அரசாங்கத்தில் பிரதான அமைச்சராக செயற்பட்ட பிரபல அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த முன்னாள் அமைச்சரை இன்று அல்லது நாளை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனை தொடர்பான வழக்கு விசாரணைக்கமைய, இந்த கைது இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு விசாரணை நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீளப்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சமகால அரசாங்கத்தின் கீழ் அது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri