ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள நிலை: விமான சேவைகள் முடங்கும் ஆபத்து
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 24 விமானங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் 11 விமானங்களாக குறைக்கப்படும் என விமான சேவையின் ஸ்ரீலங்கன் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் போட்டியிட முடியாது நிலைமை ஏற்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான 24 விமானங்களில் எட்டு விமானங்களின் பயணிக்கும் கால எல்லை அடுத்த ஆண்டு காலாவதியாகும் எனவும், தற்போதைய தினசரி அட்டவணையைப் பராமரிக்க விமானங்களைப் பெறுவது கட்டாயமாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பல வர்த்தக விமானங்களை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக விண்ணப்பம் செய்வதன் மூலம் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஸ்ரீலங்கன் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை கொள்வனவு செய்ய தயாராகி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
