கட்டுநாயக்க விமான நிலையத்தில் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள விமான நிலையங்களில் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் பிரபு பிரிவுகளுக்காக உணவு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் சுதந்திர சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அதன் தலைவர் ஜானக விஜேபதிரத்ன தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும், இந்த நடவடிக்கைகளால் சாதாரண பயணிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய விமான நிலையத்திற்கு செல்லும் அரசியல்வாதிகள் அல்லது பிரபுக்கள் நீண்ட நேரம் விமானங்களுக்கு காத்திருந்தாலும் உணவு நீர் எதுவும் வழங்கப்படாதென தெரிவிக்கப்படுகின்றது.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam