கட்டுநாயக்க விமான நிலையத்தில் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள விமான நிலையங்களில் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் பிரபு பிரிவுகளுக்காக உணவு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் சுதந்திர சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அதன் தலைவர் ஜானக விஜேபதிரத்ன தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும், இந்த நடவடிக்கைகளால் சாதாரண பயணிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய விமான நிலையத்திற்கு செல்லும் அரசியல்வாதிகள் அல்லது பிரபுக்கள் நீண்ட நேரம் விமானங்களுக்கு காத்திருந்தாலும் உணவு நீர் எதுவும் வழங்கப்படாதென தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri