கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடு தொடர்பில் வெளியான தகவல்
கட்டுநாயக்க விமான நிலையம் வழமை போன்று செயற்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் இன்று நாடு பூராகவும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே இன்று கடமைக்காக வந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏற்கனவே சுமார் 5 சரக்கு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அவற்றின் கொள்கலன்களை இறக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக் குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இன்று வழமையாக இயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
