இலங்கை மக்கள் மற்றுமொரு பொருளுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவதில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் எரிபொருள், உரம் மற்றும் எரிவாயு வரிசைகளை தொடர்ந்து தற்போது ஒரு புதிய வரிசையும் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் நாடு முழுவதும் பல இடங்களில் நீண்ட வரிசையில் சவர்க்காரத்திற்காக மக்கள் காத்திருக்கும் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
சிலர் 2,000, 3,000 மற்றும் 5,000 ரூபாய்க்கு மேல் சவர்க்காரம் கொள்வனவு செய்வதனை அவதானிக்க முடிந்துள்ளது.
சவர்க்காரங்கள் பாரிய அளவு விலை உயர்வதாக பரவிய செய்தியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சவர்க்கார வரிசையில் இருப்பவர்கள் சராசரி மக்கள் வாங்கும் சவர்க்காரங்களை விடவும் அதிகமாக கொள்வனவு செய்வதாக தெரியவந்துள்ளது.



பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
