ஈரானை சரணடையுமாறு கூறிய ட்ரம்ப்! அடுத்த ஆபத்தை நோக்கி செல்லும் போர்களம்
ஈரான் அமெரிக்காவிடம் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என நேற்றையதினம்(6.3.2026) டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கையை முன்வைத்து இருந்தார்.
அதுமட்டுமன்றி ஈரானின் அடுத்த தலைவரையும் அமெரிக்காவே தேர்ந்தெடுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையிலே, ஈரான் அமெரிக்காவிடம் சரணடைய மாட்டாது என அமெரிக்காவிலுள்ள அரசியல் ஆய்வாளர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,அமெரிக்கா தற்போது மிகப் பெரிய சிக்கலில் சிக்கி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் போருக்கு அமெரிக்கா கூறிய காரணத்தின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறதா, இதன் பின்னணி என்ன, அமெரிக்கா இதனை எப்படி கையாளுகிறது போன்ற விஷயங்களைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் புவிசார் அரசியல் நோக்கர் அருணிடம் இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நிராஜ் டேவிட் விவாதித்துள்ளார்.