இலங்கைக்கு காத்திருந்த பாரிய அழிவு! ரணிலால் தவிர்க்கப்பட்ட விபரீதம்

Palitha Range Bandara Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Rajapaksa Family
By Benat Jun 17, 2022 06:11 AM GMT
Report

ரணில் விக்ரமசிங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் நாட்டுக்குள் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 

தற்போது  எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையினால் இலங்கைக்கு ஏற்படவிருந்த பாரிய அழிவு ரணில் விக்ரமசிங்கவினால் தவிர்க்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள பின்வாங்கியவர்களே ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு காத்திருந்த பாரிய அழிவு! ரணிலால் தவிர்க்கப்பட்ட விபரீதம் | Sri Lanka Economic Crisis Ranil Wickamasinghe

இலங்கையை அந்நியப்படுத்திய உலக நாடுகள் 

நாடு பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்டு, வங்குராேத்து அடைந்த நிலையிலும் உலக நாடுகள் இலங்கையை அந்நியபடுத்தி இருந்த நிலையிலுமே ரணில் விக்ரமசிங்க பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு ஒருமாத காலம் முடிவடைந்திருக்கின்றது. இந்த காலப்பகுதியில் நாடு எதிர்கொண்டு பிரதான பிரச்சினைக்கு தீர்வுகாண பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன் இன்னும் பல விடயங்களை முன்னெடுக்க தேவையான வேலைத்திட்டங்களை செய்துவருகின்றார்.

பொதுமக்கள் குழப்பம் ஏற்படுத்தாதீர்! இரத்து செய்யப்படும் நடைமுறை 

அத்துடன் ராஜபக்சவினர் சர்வதேச நாடுகளில் உதவி செய்யக்கூடிய நாடுகளை பகைத்துக்கொண்டு இருந்தனர். அதனால் எமக்கு உதவி செய்ய அந்த நாடுகள் முன்வரவில்லை. தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க உலக நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி இலங்கைக்கு உதவுமாறு கேட்டு வருகின்றார்.

அதன் பிரகாரம் பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்வதாக உறுதியளித்திருக்கின்றன. குறிப்பாக அமெரிக்க 120 மில்லியன் டொலர் உதவி முன்வந்திருக்கின்றது. இந்தியாவின் உதவி தொடர்ந்து கிடைக்கப்பெறுகின்றது.

அதேபோன்று சீனா கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றது. முதற்கட்ட சுகாதார உபகரணங்களை சீனா வழங்கி இருக்கின்றது. அடுத்த கட்டமாக இன்னும் பல உதவிகளை வழங்குவதாக சீன தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.

அதேபோன்று சீனாவின் அரசி சில தினங்களில் கிடைக்க இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் குழுவொன்று இலங்கைக்கு வர இருக்கின்றது.

அவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படும். அதன் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம்.

இலங்கைக்கு காத்திருந்த பாரிய அழிவு! ரணிலால் தவிர்க்கப்பட்ட விபரீதம் | Sri Lanka Economic Crisis Ranil Wickamasinghe

மூன்று வாரங்கள் தொடரும் நெருக்கடி நிலை

மேலும் தற்போது நாட்டில் பாரிய எரிபொருள் பிரச்சினை இருந்து வருகின்றது. எதிர்வரும் 3 வாரங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கும் என பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தார். மூன்று வாரங்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்போம்.

நாடு பாரிய வங்குராேத்து அடைந்த நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆனால் இன்று ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சியில் சிலர் விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு விமர்சிப்பவர்களை, அன்று இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு அழைத்தபோது பின்வாங்கினார்கள்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு நாட்டில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை 

ரணில் விக்ரமசிங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் நாட்டுக்குள் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும். ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டிருக்கும் இந்த பொறுப்பு இலகுவானதல்ல என்பது அவரை விமர்சிப்பவர்களுக்கு தெரியும்.

என்றாலும் ஏற்றுக்கொண்ட பொறுப்பை எப்படியாவது நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அத்துடன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிவாரண வரவு செலவு திட்டம் ஒன்றை பிரதமர் விரைவில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றார்  என குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கைக்கு காத்திருந்த பாரிய அழிவு! ரணிலால் தவிர்க்கப்பட்ட விபரீதம் | Sri Lanka Economic Crisis Ranil Wickamasinghe

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Markham, Canada

19 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US