எரிபொருள் விலையில் கடுமையான உயர்வு! பின்னணியில் இருக்கும் ஊழல்..

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Rakesh Jun 03, 2026 10:00 AM GMT
Report

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தங்களது உள்நாட்டு எரிபொருள் விலையைக் குறைத்துள்ள போதிலும், இலங்கையில் நிறுவனங்களின் மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருள் விலை குறைக்கப்படாமல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டு எதிர்க்கட்சி பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிகழ்வில் ஜனதா சேவக கட்சியின் தலைவர் ஜகத் விஜேசேகர மற்றும் லங்கா சமசமாஜ கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் பேஷல செனசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

கணேமுல்லை சஞ்சீவ கொலைவழக்கு! பெண் சட்டத்தரணி தொடர்பில் பொலிஸாரின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

கணேமுல்லை சஞ்சீவ கொலைவழக்கு! பெண் சட்டத்தரணி தொடர்பில் பொலிஸாரின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

விலைகள் உயரும் அபாயம் 

இங்கு சுகீஸ்வர பண்டார மேலும் தெரிவிக்கையில், 

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம், கடந்த எட்டு மாத கால ஆட்சிக்குள் எதிர்மறையான பல 'கின்னஸ் சாதனைகளைப்' படைத்துள்ளது.

இலங்கைக்குத் தரமற்ற மற்றும் சாம்பல் நிறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமை, அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்தமை மற்றும் மின்வெட்டை மேலாண்மை செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட பில்லியன் கணக்கான டொலர் நஷ்டத்தை ஈடுசெய்யவே அரசாங்கம் தற்போது எரிபொருள் விலையைக் குறைக்காமல் அதிகரித்துள்ளது.

தெற்காசியாவிலேயே அதிக விலைக்கு எரிபொருளை விற்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 முதல் மே 31 வரையான காலப்பகுதியில், உலகிலேயே அதிக சதவீதத்தால் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை அதிகரித்த நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.

எரிபொருள் விலையில் கடுமையான உயர்வு! பின்னணியில் இருக்கும் ஊழல்.. | Sri Lanka Economic Crisis 2026

இதன்படி, இலங்கையில் டீசல் விலை 38.9 வீதமாகவும், பெட்ரோல் விலை 27.6 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரான் - இஸ்ரேல் யுத்தம் காரணமாகவே விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்யான சாக்காகும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரு வாரங்களுக்கு முன்னர் நாட்டில் இரு வாரங்களுக்குரிய எரிபொருளே உள்ளதாகக் கூறியிருந்தார். அப்போது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 94 டொலராக இருந்தது.

தற்போது விலை மேலும் குறைந்துள்ள நிலையிலும் உள்நாட்டில் விலையை அதிகரிப்பது, தற்போதைய அரசாங்கத்திற்கும் அதன் பாடவிதான அமைச்சருக்கும் விலைக்கட்டுப்பாடு குறித்து எந்தவொரு முறையான புரிதலும் இல்லை என்பதையே காட்டுகிறது.

அன்று கஞ்சன விஜேசேகரவின் கணக்கிற்குத் தரகுப் பணம் செல்வதாகக் குற்றம் சாட்டியவர்கள், இன்று தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் சட்டவிரோத தரகுப் பணம் 'பெலவத்தைக்கு' (ஜே.வி.பி. தலைமை அலுவலகம்) செல்வது குறித்து மௌனம் காப்பது ஏன்?

இந்தத் தரகுப் பணம் யாருக்குச் செல்கிறது என்பதை அரசாங்கம் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு நாட்டை முழுமையாகக் காட்டிக்கொடுத்துள்ளது. ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு இவ்வாறு ஆடியிருக்க மாட்டார்.

நாட்டின் பணவீக்கம் 7 வீதமாக உயர்ந்துள்ள நிலையில், பொருளாதாரம் முறையாக நிர்வகிக்கப்படாமல் தற்காலிக தீர்வுகளையே அரசாங்கம் நம்பியிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டுமாயின், ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் அனுபவ ரீதியான ஆதரவை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எரிபொருள் விலையில் கடுமையான உயர்வு! பின்னணியில் இருக்கும் ஊழல்.. | Sri Lanka Economic Crisis 2026

இந்த எரிபொருள் விலை அதிகரிப்பின் சங்கிலித் தொடர் விளைவாக, ஒரு 'பிளேன்டி' மற்றும் தேநீர் முதல் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இன்று நாட்டில் ஒரு 'பொலிஸ் ராஜ்யமே' நிலவுகிறது. அன்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் ஆட்சியில் இருந்தபோது கூட இப்படி ஒரு பொலிஸ் ராஜ்யம் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, எதிர்காலத்தில் கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வரும் எதிர்பார்ப்பு மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைமைத்துவம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

"கூட்டு எதிர்க்கட்சி என்பது பல கட்சிகளின் கூட்டணியாகும் என்பதால் அதற்கு இன்னும் ஒரு குறிப்பிட்ட தலைவர் நியமிக்கப்படவில்லை. அரசாங்கம் தேர்தலை நடத்தும் சரியான தருணத்தில் முறையானதொரு தலைமைத்துவம் உருவாகும்" என்று குறிப்பிட்டார்.

மேலும், கடந்த தேர்தல்களின் போது அரசாங்கத்திற்கு 24 இலட்சம் வாக்குகள் குறைந்திருந்ததன் காரணமாகவே அவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றனர் என்றும், சிலவேளைகளில் தற்போதைய ஆட்சியாளர்கள் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலையும் கூட நடத்தாமல் தட்டிக்கழிக்கக் கூடும் என்றும் சுகீஸ்வர பண்டார மேலும் எச்சரித்தார். 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! சற்று முன்னர் கோட்டாபயவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! சற்று முன்னர் கோட்டாபயவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை

இலங்கை உட்பட 60 நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US