அப்பம் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையில் இலங்கையர்கள்
நாடளாவிய ரீதியில் உள்ள 5000இற்கும் மேற்பட்ட அப்பம் தயாரிப்பாளர்கள் வேலை இல்லாமல் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பம் கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
50 வீதத்தால் குறைவு
நாடளாவிய ரீதியில் அப்பம் மற்றும் முட்டை அப்பம் நுகர்வோர்கள் 50 வீதத்தால் குறைந்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, நுகர்வோர் அப்பங்களை வாங்குவதைக் தவிர்த்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 5000இற்கும் மேற்பட்ட அப்பம் தயாரிப்பாளர்கள் வேலை இல்லாமல் திண்டாடுவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் அப்பம் என்பதையே நுகர்வோர் நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அசேல சம்பத் மேலும் தெரிவித்தார்.
you may like this video


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 16 மணி நேரம் முன்

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே Cineulagam

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் News Lankasri
