இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை குறித்து அரவிந்தவின் யோசனை
2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை சரித் அசலங்க ஏற்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வீரர்களுடன் கலந்தாலோசிக்கும் திட்டம்
அசலங்க, போட்டியின் போக்கை கணிக்கும் திறன் மற்றும் பொறுப்புள்ள துடுப்பாட்டம் ஆகிய இயலுமைகளை கொண்டுள்ளதாக அரவிந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது மைதானத்திற்கு வெளியில் இருந்தான ஒரு பார்வை எனவும் வீரர்களுடன் கலந்தாலோசிக்கும் திட்டம் இல்லை எனவும் அரவிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலகக்கிண்ண தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் 04ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை Cineulagam
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri