உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல்: நீதிக்கோரியும் ஆர்ப்பாட்டங்கள் (photos)
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக நாடளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் அமைதிவழி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்று (21.04.2023) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடித்த நேரமான 8.42 மணிக்கு தேவாலய மணி ஒலிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.
நினைவேந்தலில் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது பலசமய ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் இன்று (21.04.2023) சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றுள்ளன.
இந்நிகழ்வின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் முகமாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறாமையினால் அவற்றினை வலியுறுத்தி நீதி கோரி அமைதியான முறையில் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்ட நடவடிக்கையானது சாள்ஸ் மண்டபத்தின் வாசலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஆயர் இல்லத்தின் பிரதான நுழைவாயில் வரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: குமார், பவன்
புத்தளம்
இதற்கமைய ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வு புத்தளம் அன்னை ஷாந்த மரியா தேவாலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த குண்டு தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களுக்காக திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அருட்தந்தை, ஆயர்கள், அருட்சகோதரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: அசார்
மன்னார்
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்றுள்ளது.
மறைமாவட்ட ஆயர் பேர்ருட் கலாநிதி பி். ல. இம்மானுவேல் ஆண்டகையின் தலைமையில் இன்று இந்த நினைவு கூரும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது இறந்தவர்களுக்கு ஈகை சுடர் ஏற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.









உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
