உலகளாவிய கோவிட் மரணங்களின் தரவரிசையில் இலங்கைக்கு 13வது இடம்!
நாளாந்தம் நிகழும் உலகளாவிய கோவிட் தொற்று உயிரிழப்புகளின் தரவரிசையில் இலங்கை 13 வது இடத்தில் இருக்கின்றது.
இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோய் பரவத் தொடங்கிய 202 மார்ச் 11இல் இருந்து, கோவிட் வழக்குகளின் அதிகபட்ச நாளாந்த எண்ணிக்கை நேற்று (ஆகஸ்ட் 22) பதிவு செய்யப்பட்டது.
அன்றைய தினம் 4,304 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரு நாளில் இலங்கையில் கோவிட் நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியது இதுவே முதல் முறை.
இதற்கிடையில், ஆகஸ்ட் 21ம் தேதி மேலும் 183 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் நேற்று உறுதிப்படுத்தினார்.
இலங்கை இன்று (ஆகஸ்ட் 23) நேற்று 194 கோவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளாந்த கோவிட் உயிரிழப்புகளின் அடிப்படையில் இலங்கை உலகளவில் 13 வது இடத்தில் இருக்கின்றது.
‘worldometer’ இணையதளம் இதனை கூறியுள்ளது. 12 வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அமெரிக்காவில் 198 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. எனினும், அமெரிக்காவில் 3.3 பில்லியன் மக்கள் இருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், 21.8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கோவிட் மரணங்கள், தொற்றுநோய் தீவிரத்தை தெளிவாக காட்டுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
