வெளிநாடொன்றில் பெண்ணின் மரணம் தொடர்பில் இலங்கையர் கைது
பிரேசிலிய யூடியூப்பர் ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரின் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் இடம்பெற்ற தீ விபத்தில் பிரேசிலின் பிரபல யூடியூப் நட்சத்திரம் Amanda Borges da Silva உயிரிழந்த நிலையில் அவரது மரணம் தொடர்பாக இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் வேலையில்லாத 31 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
வாடகை குடியிருப்பு
டோக்கியோவின் முக்கிய சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நரிட்டாவில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் மே மாதம் முதலாம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் Amanda Borges da Silva புகையை சுவாசித்து உயிரிழந்துள்ளார்.
Amanda Borges da Silva உயிரிழக்கும் போது அவருக்கு 30 வயது என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் நடந்த நேரத்தில் தீயை அணைக்க முயற்சிக்காதது மற்றும் குடியிருப்பை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
எனினும் 31 வயதான இலங்கையர் மூன்று நாட்களுக்கு பின்னர் கட்டிடத்திற்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
நகைகள் மற்றும் மின்னணு
தீயை அணைக்க முயற்சிக்காமல் அவர் குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. பல தனிப்பட்ட பொருட்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதில் ஒரு கையடக்க தொலைபேசி, நகைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் அடங்கும்.
பிரேசிலிய ஊடகங்களில் வெளியான தகவல்களில் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகவும், அவரது மரணம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என ஜப்பான் பொலிஸார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளன.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
