ரணிலின் வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை
நீதிமன்ற நடவடிக்கைகளின் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய நபர்கள் குறித்து விசாரணை நடத்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சமீபத்திய நீதிமன்ற விசாரணையின் போது பதிவாகியுள்ளது.
கௌரவம் மற்றும் ஒழுக்கம்
மேலும் நீதித்துறையின் கௌரவம் மற்றும் ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களுக்காக இந்த நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் விசாரணை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவின்படி, இந்த சட்டவிரோத செயல்களுக்குப் பொறுப்பான நபர்களை உடனடியாகக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
