கோவிட் பரவலின் தற்போதைய நிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
கோவிட்-19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு பொதுமக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் நிபுணர் அதுல லியனபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''2023 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், கோவிட் தொற்றை சாதாரணமாக ஒரு சுவாச நோயாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.

அத்துடன், தற்போது பரவிவரும் கோவிட் -19 திரிபுகளுக்குக் கடுமையான நோய் நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய இயலுமைகள் கிடையாது.
அறிகுறிகள்
சாதாரண சுவாச நோய்க்கான அறிகுறிகள் மற்றும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதைக் காட்டிலும், வேறு எந்த அறிகுறிகளையும் கொண்டிராதமையினால் சுவாச நோய்களில் ஒன்றாக கோவிட் வகைப்படுத்தப்படுகிறது.

எனவே, சுவாச நோய்களைக் கொண்டிருக்கும் ஒருவர், சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டால் மாத்திரமே மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவது பொருத்தமானதாக இருக்கும்.''என அவர் கூறியுள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        