மேல் மாகாண பாடசாலைகளில் விசேட கொவிட் பரிசோதனை
மேல் மாகாண பாடசாலைகளில் விசேட கொவிட் பரிசோதனைகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எழுமாறான அடிப்படையில் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தில் இன்று இந்த பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.நாள் ஒன்றுக்கு சில பாடசாலைகளை தெரிவு செய்து அதில் 30 மாணவ, மாணவியருக்கு அன்டிஜன் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.
இவ்வாறு பரிசோதனை நடாத்துவதன் மூலம் கொவிட் எவ்வாறு பரவிச் செல்கின்றது என்பதனை கண்டறிந்து கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஒக்ரோபர் மாதம் 4ம் திகதி முதல் இதுவரையில் மேல் மாகாணத்தில் 42000 கொவிட் தொற்றுறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
