நீதி அமைச்சர் தலைமையில் விசேட குழு ஜெனிவாவிற்கு விஜயம்
நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, பிரதி அமைச்சர் முனீர் மௌலவி உட்பட அந்த அமைச்சின் அதிகாரிகள் கொண்ட விசேட குழு இந்த வாரம் ஜெனிவா செல்கின்றது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெறுகின்றது. அதில், பங்கேற்கவே இந்தக் குழு அங்கு செல்கின்றது.
ஜெனிவா விஜயம்
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு கடந்த திங்கட்கிழமை ஜெனிவா சென்று இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்து, நாடு திரும்பியுள்ளது.
இந்தநிலையிலேயே நீதி அமைச்சர் தலைமையில் விசேட குழு ஜெனிவா செல்லவுள்ளது.
இந்தக் குழு ஜெனிவாவில் உள்ளக நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டவும் உள்ளகப் பொறிமுறை விசாரணைகளை வலுப்படுத்தும் செயல்முறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபடும் என்றும் கூறப்படுகின்றது.



