2009 இல் நடேசன் உட்பட மூவரை ஏமாற்றிய கனிமொழி! தசாப்தம் கடந்த இரகசியங்கள்
27.04.2009 ஆண்டன்று காலை 10 மணியளவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைக்கு பொறுப்பாளர் பா.நடேசன் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலிதேவன் ஆகியோர் தமிழகத்தின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தில் இருந்த கனிமொழிக்கு அழைப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த தொலைப்பேசி அழைப்பில் தமிழர் தாயகம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது,உங்களுடைய ஆதரவை தாருங்கள், உங்களுடைய இறுதி முடிவிற்காகதான் காத்திருக்கின்றோம், யுத்தத்தை நிறுத்துவதற்கான அழுத்தத்தை கொடுங்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் எதற்காக ஜெயலலிதாவை தொடர்புகொண்டீர்கள்? என்று கண்டிப்பான தொனியில் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..



