விசேட வரி தொடர்பில் நிதி அமைச்சு பிறப்பித்துள்ள உத்தரவு
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.
விசேட பண்ட வரி
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு, 50 ரூபா விசேட பண்ட வரியை நிதியமைச்சு விதித்துள்ளது.

இந்த விசேட பண்ட வரி கடந்த 23 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை 3 மாதங்களுக்கு இந்த வரி அறவீடு நடைமுறையில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சின் உத்தரவு

மேலும், உப்பு இறக்குமதியின் போது, கிலோவொன்று விதிக்கப்படும் 40 ரூபா விசேட பண்ட வரியிலிருந்து 10 ரூபா வசூலிக்கப்பட வேண்டும் என்றும், எஞ்சிய தொகையை மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வணிக நோக்கமன்ற மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நிதி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
| பெரிய வெங்காய அறுவடையில் வீழ்ச்சி |
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan