விசேட வரி தொடர்பில் நிதி அமைச்சு பிறப்பித்துள்ள உத்தரவு
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.
விசேட பண்ட வரி
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு, 50 ரூபா விசேட பண்ட வரியை நிதியமைச்சு விதித்துள்ளது.

இந்த விசேட பண்ட வரி கடந்த 23 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை 3 மாதங்களுக்கு இந்த வரி அறவீடு நடைமுறையில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சின் உத்தரவு

மேலும், உப்பு இறக்குமதியின் போது, கிலோவொன்று விதிக்கப்படும் 40 ரூபா விசேட பண்ட வரியிலிருந்து 10 ரூபா வசூலிக்கப்பட வேண்டும் என்றும், எஞ்சிய தொகையை மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வணிக நோக்கமன்ற மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நிதி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
| பெரிய வெங்காய அறுவடையில் வீழ்ச்சி |
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 8 மணி நேரம் முன்
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்.கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை!
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்