தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ரணிலுக்கு சிறப்பு பாதுகாப்பு
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பிற்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு 8 சிறைச்சாலை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறை வட்டாரங்கள்
இந்த அதிகாரிகளில் இரண்டு ஜெயிலர்களும் நான்கு ஆயுதமேந்திய அதிகாரிகளும் அடங்குவர். கூடுதலாக, தீவிர சிகிச்சைப் பிரிவைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து நேற்று (23) கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது அவரது ஆரம்ப மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மேலதிக சிகிச்சைக்காக என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை
பரிசோதனைகள் முடிந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன், அவரை மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி இரவு நீதிமன்றத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, முதலில் மகசின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ஒரு கைதியாகப் பதிவு செய்யப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அவரை வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
