ஜூலையில் விசேட நாடாளுமன்ற அமர்வு
எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் (Mahinda Yapa Abeywardena) அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்றத்தின் 16ஆவது நிலையியற் கட்டளையின் பிரகாரம் இந்த அமா்வு இடம்பெற்றுள்ளது.
பிரதமரின் கோரிக்கை
2024ஆம் ஆண்டு ஜுலை 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த அமா்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களும் பங்குபற்ற வேண்டுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இவ்விசேட ஒருநாள் அமர்வு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |