மத்திய மாகாண ஆளுநரின் விசேட அறிவிப்பு
மத்திய மாகாணத்துக்குள் அவசர தேவைகள் மற்றும்; அலுவலகத்தேவைகள் அற்ற வகையில் வரும் எவருக்கும் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண கோவிட் தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வில் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் மத்திய மாகாணத்தில் கோவிட் பரவுவதை தடுப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனினும் பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துக்கொண்டால் இந்த முயற்சிகள்
அனைத்தும் பயனற்றுப்போய்விடும் என்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே
தெரிவித்துள்ளார்.