சித்தங்கேணியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
சித்தங்கேணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலக தலைமையில் சித்தங்கேணிப் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் அத்தியாவசிய தேவை கருதி வீதியால் பயணித்தவர்கள் அனுமதிக்கப்பட்டதுடன், தேவையற்று வீதியில் நடமாடியவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் நலன் கருதி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.