அரசாங்கத்திற்கும், இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு
அரசாங்கத்திற்கும், இறக்குமதியாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்போன்று இன்று நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிற்கும் (Lasantha Alagiyawanna), அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
இதன்போது நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீனி மற்றும் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பால் மா விலை உயர்த்தப்பட்டாலும் பால் மாவிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த பிரச்சினைகள் குறித்து இறக்குமதியாளர்களுடன் பேசி தீர்வு எட்ட முயற்சிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
