அரசாங்கத்திற்கும், இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு
அரசாங்கத்திற்கும், இறக்குமதியாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்போன்று இன்று நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிற்கும் (Lasantha Alagiyawanna), அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
இதன்போது நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீனி மற்றும் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பால் மா விலை உயர்த்தப்பட்டாலும் பால் மாவிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த பிரச்சினைகள் குறித்து இறக்குமதியாளர்களுடன் பேசி தீர்வு எட்ட முயற்சிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri