அரசாங்கத்திற்கும், இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு
அரசாங்கத்திற்கும், இறக்குமதியாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்போன்று இன்று நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிற்கும் (Lasantha Alagiyawanna), அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
இதன்போது நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீனி மற்றும் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பால் மா விலை உயர்த்தப்பட்டாலும் பால் மாவிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த பிரச்சினைகள் குறித்து இறக்குமதியாளர்களுடன் பேசி தீர்வு எட்ட முயற்சிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri