பாடசாலைகளின் பராமரிப்பில் விசேட நடவடிக்கை அவசியம்! ஆளுனர் சுட்டிக்காட்டு
பாடசாலைகளின் பராமரிப்பில் உள்ள நிலைமைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையிலான மாகாண திணைக்களத் தலைவர்களுlனான விசேட கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வன்னிப் பிராந்தியத்திலுள்ள சில பாடசாலைகளின் சூழல்கள் பற்றைகள் வளர்ந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக குறித்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாடசாலைகளின் பராமரிப்பு
மேலும், மலசலகூடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் அவை பயன்படுத்தப்படாமல் உள்ளமையும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்ட்டது.
இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பதிலளித்த கல்வி அமைச்சின் செயலர், பல இடங்களில் பாடசாலைகளின் பராமரிப்பே சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக எந்தெந்த பாடசாலைகளில் இவ்வாறான நிலைமைகள் உள்ளன என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
