உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள்

Batticaloa Sri Lanka Easter Attack Sri Lanka
By Independent Writer Apr 21, 2024 09:54 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter Sunday attack) இடம்பெற்று 5 வருட நினைவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினர்களாலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலில் 272 பேர் பலியாகியதோடு 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2028ஆம் ஆண்டில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - பேராசிரியர் எச்சரிக்கை

2028ஆம் ஆண்டில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - பேராசிரியர் எச்சரிக்கை

மட்டக்களப்பு காந்தி பூங்கா

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

செய்தி - குமார்

திருகோணமலை

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று ஐந்தாண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து திருகோணமலையில்  விஷேட வழிபாடு இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

அத்துடன், ஞாயிறு ஆராதனை நிறைவடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

திருகோணமலை அந்தோனியார் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி இறந்தவர்களை நினைவு கூர்ந்து நீதிக்காக பிரார்த்தனை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

செய்தி - பதுர்தீன் சியானா

யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டுள்ளது.

அந்தவகையில், வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும் ஏப்ரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றுள்ளன. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

இதன்போது, ஏப்ரல் 21 அன்று தேவராதனையின் போது, தமது இன் உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செய்யப்பட்டதுடன் தேவாலயத்தின் பிரதான மணியும் ஒலிக்கப்பட்டு கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

செய்தி - கஜிந்தன்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 வருட நினைவை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.


செய்தி - டில்ஷான்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்

அதேவேளை, மட்டக்களப்பு (Batticaloa) சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 வருட நினைவை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

special-mass-for-easter-sunday-attack

உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டியும் காயப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் குறித்த ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

இதன்போது குண்டுத்தாக்குதலில் பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி தொடர்புகள் குறித்து வெளியாகும் தகவல்களை அடிப்படையாக கொண்டு அவர்களை கைதுசெய்து விசாரணைசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனைபெற்றக்கொடுக்கவேண்டும் என குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள் | Special Mass For Easter Sunday Attack

இந்த அஞ்சலியில் குண்டுத்தாக்குதலின்போது தனது இரண்டு கண்களையும் இழந்த சிறுமியும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21 ம் திகதி சீயோன் தேவாலயத்தில்; இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 83 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

special-mass-for-easter-sunday-attack

special-mass-for-easter-sunday-attack

செய்தி - சசிகரன், சரவணன் மற்றும் குமார்

ராஜபக்சர்கள் மீது கடும் குற்றச்சாட்டு : கடும் கோபத்தில் நாமல் எம்.பி

ராஜபக்சர்கள் மீது கடும் குற்றச்சாட்டு : கடும் கோபத்தில் நாமல் எம்.பி

யாழில் தனியார் பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து தாக்குதல்

யாழில் தனியார் பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US