மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம்: விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை
மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை - பச்சை வீட்டு திட்டம் பிரதேசத்தில் இன்று (24) காலை விசேட அதிரடிப்படையினரால் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 15ஆம் திகதி குறித்த கிராமத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் கடந்த 22 ஆம் திகதி அதே வீட்டின் முன்பாக இருந்து கண்டெடுக்கப்பட்ட கைகுண்டு ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து மேற்படி சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
35 வீடுகளில் சோதனை
இதற்கமைய, இன்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட இச்சுற்றிவளைப்பின் போது பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர்கள் ஒவ்வொரு வீடாக சென்று மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், கிட்டத்தட்ட 35 வீடுகள் இவ்வாறு சுற்றி வளைப்பு தேர்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, 28 பொலிஸார்,10 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 22 இராணுவத்தினர் என சுமார் 60 பேர் உள்ளிட்ட குழு இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam