மகிந்தவுக்காக களமிறங்கியுள்ள சிறப்பு குழு - மகிந்தவின் அடுத்தக்கட்ட திட்டம்
கொழும்பில் மீண்டும் குடியேற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிரமாக முயற்சித்து வருகிறார். எனினும் அவருக்கு பொருத்தமான வீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் முக்கிய பகுதிகளிலுள்ள நான்கு வீடுகள் தெரிவு செய்யப்பட்ட போதும், மகிந்தவுக்கு பிடித்தமானதாக அவை இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மகிந்தவின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில் வீடொன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறப்பு குழுவொன்று களமிறங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மகிந்தவின் அரசியல் செயற்பாடு
இன்னும் மகிந்த அரசியல் செயற்பாட்டில் உள்ளமையினால், பல ராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்களை அவர் சந்திக்க வேண்டியுள்ளதால், அதற்கு பொருத்தமான வீடொன்று தேடி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

போதுமான மற்றும் பொருத்தமான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ள பகுதியில் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுப்பதே எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்ற பொருத்தமான வீடு விரைவில் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சாகர காரியவசம் மேலும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ஒழிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்ச விஜேராம மாவத்தையில் உள்ள அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் வீட்டிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri