சிறையிலுள்ள இந்து மதக் கைதிகளுக்கு கிடைக்கவுள்ள விசேட வாய்ப்பு
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வழங்கவுள்ளது.
இதன்படி, நாளையதினம் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
விசேட வாய்ப்பு
சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி.திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம், இந்து கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு மட்டும் போதுமான உணவு மற்றும் இனிப்புகளை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி, நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் வௌிநபர்களை சந்திப்பதற்கான நடவடிக்கைகள், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைச்சாலை விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri