முல்லைத்தீவு நகரில் விசேட சிரமதானப் பணி
கொண்டுவருதல் (Ending Plastic Pollution) எனும் உலக சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருளுக்கு இணங்க இவ்வாண்டுக்கான சுற்றாடல் வாரம் மே 30 ஆம் திகதி முதல் ஜுன் 5 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.
இதனூடாக, உலகளாவிய ரீதியில் பிளாஸ்ரிக் மூலம் ஏற்படும் மாசுபாட்டிற்கு இறுதித் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் எதிர்ப்பார்ப்புடன் பிளாஸ்ரிக் மாசுபாட்டிற்கு எதிராக போராடுவதற்கான கூட்டு நடவடிக்கையொன்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நோக்த்திற்கு இணங்க ஆரம்பமாகிய. தேசிய சுற்றாடல் வாரத்தின் இன்றய தினம் (30.05.2025) பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவத் தினமாக அமைந்துள்ளது அதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்ட பட்டணச் சூழலை தூமைப்படுத்தும் சிரமதானப்பணி மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 7.00 மணி தொடக்கம் காலை 9.00 மணிவரை நடைபெற்றது.
Clean Sri Lanka நிகழ்ச்சி
தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நிகழ்ச்சித்திட்டமான Clean Sri Lanka நிகழ்ச்சித்திட்டத்தின் சுற்றாடல் எனும் தூணின் கீழ் சுற்றாடலை நேசிக்கும் சமூகமொன்றை உருவாக்குதல் பிரதான நோக்கமாகும்.
அதற்காக, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் அதன் நிலைபேறுடைய தன்மையை பேணுவதற்கான பல்வேறு செயற்பாடுகளில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் , உள்ளூராட்சி சபைகள் அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக, உலக சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருளுக்கு இணங்க, சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள பிளாஸ்ரிக் பயன்பாடு மற்றும் முறையற்ற விதத்தில் கழிவுகளை அகற்றல் என்பன தொடர்பாகவும் மாவட்ட செயலகத்தின் நகரத்தை சுத்தமாகவும் பசுமையாகவும் பேணும் (“Keep Our City Clean and Green”) திட்டத்தின் கீழும் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.






மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்ற முழுநேர வேலையுடன் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற கேரள பெண் News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam
