பொலிஸாருடன் கைகோர்க்கும் இராணுவத்தினர்! களமிறக்கப்பட்டுள்ள படையினர்
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸாருக்கு தமது ஆதரவை வழங்குவதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
நாட்டின் மக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் பங்களிப்பதாக இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் நிலவும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் அமைதியான சூழலைப் பேணுவதற்காக ரோந்து மற்றும் வேகத்தடைகளை அமைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படையின் மோட்டார் சைக்கிள் அணியும் இலங்கை இராணுவ விசேட அதிரடிப்படையினரும் இன்று (11) கொழும்பு நகரில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam