மீளப்பெறப்படவுள்ள சிலிண்டர்கள்! சற்று முன்னர் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
கடைகள் மற்றும் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத எரிவாயு கொள்கலன்கள் மீளப் பெறப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 4ம் திகதிக்கு முன்னதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள அல்லது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள முத்திரை அகற்றப்படாத எரிவாயு கொள்கலன்கள் மீளப் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களாக நாட்டில் எரிவாயு சிலிண்டர்களும், எரிவாயு அடுப்புக்களும் வெடித்துச் சிதறியதையடுத்து நாட்டில் பெரும் சர்ச்சையாக இது மாறியிருந்தது.
சர்வதேச ஊடகங்களும் இந்த வெடிப்புச் சம்பவங்களை முக்கிய செய்திகளாக வெளியிட்டிருந்தன. எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கடுமையாக விமர்சித்திருந்தன.
இந்நிலையில், எரிவாயு நிறுவனங்கள் இது தொடர்பில் தற்போது சில மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri