லண்டனில் பாரிய தீவிபத்து - 100க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்
தென்கிழக்கு லண்டனில் உள்ள டவர் பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சுமார் 120 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ப்ரோம்லியில் உள்ள செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் உள்ள 17 மாடி கட்டிடத்தின் 15வது மாடியில் கூரையின் ஒரு பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாக லண்டன் தீயணைப்புப் படை (LFB) தெரிவித்துள்ளது. யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் சாய்ந்த கூரையின் ஒரு பகுதியில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் கருப்பு புகை வருவதைக் காட்டியது.
"தமது குழுக்கள் சீரான முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இது ஒரு நீடித்த சம்பவமாக இருக்கும், மேலும் எங்கள் குழுவினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்." என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"சிலர் வருத்தப்பட்டு அழுதனர், மற்றவர்கள் அதிர்ச்சியடைந்து என்ன நடக்கிறது என்று குழப்பமடைந்தனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri