காசா போர் முனையில் பலியான இஸ்ரேல் அமைச்சரின் மகன்
இஸ்ரேல் போர் சபையின் அமைச்சரும் முன்னாள் இராணுவ தலைமைத் தளபதியுமான காடி ஐசன்கோட்டின் மகன் காசா போர் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
ஐசன்கோட் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கட்சியின் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஆகிய இருவரும் அக்டோபர் 7 தாக்குதல் பிறகு பிரதமர் நெதன்யாகு அமைத்த போர் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றினர்.
தொடர் போராட்ம்
இந்நிலையிலே இவரது மகன் கல் மெயிர் ஐசன்கோட் (25) காசா போர் முனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் பற்றி பென்னி காண்ட்ஸ் தெரிவிக்கையில், “காடி மற்றும் அவரது குடும்பத்துக்கு இஸ்ரேல் சார்பாக எனது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். கல் எதற்காக இறந்தாரோ அந்தப் புனித காரணத்துக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்” என கூறியுள்ளார்.
மேலும், கல் மெயிருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஹெர்ஸ்லியாவில் இன்று (08 .12.2023) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நெதன்யாகு முன்னதாக இந்த இழப்பு தனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ மரியாதையோடு கொண்டு செல்லப்பட்ட வீரரின் உடலுக்கு பல்வேறு தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
