அமெரிக்கா - ஈரான் போர் மும்முரம்: போர்நிறுத்தம் 'முடிவுக்கு வந்தது' என ட்ரம்ப் அதிரடி பிரகடனம்
ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என்று ஜனாதிபதி ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக, ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) பேச்சுவார்த்தைகளை இரத்து செய்வதில் அமெரிக்க நிர்வாகம் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்று, 53 மணி நேரப் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுமார் ஆறு மணி நேரத்திற்கு முன்பு வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
போர்நிறுத்தம்
இன்று காலை அமெரிக்க நிர்வாகத் தரப்பிலிருந்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என்று ஜனாதிபதி ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மறுபுறம், தற்போதைய மோதல்களுக்கு மத்தியிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும், தொடர முடியும் என்று அமெரிக்க நிர்வாகத்தின் சில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் ட்ரம்பின் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரே கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, ட்ரம்பின் இந்த தொடர் இராணுவ நடவடிக்கைகளுக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அதிரடி பிரகடனம்
தற்போது போர்நிறுத்தம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டுள்ளதால், வெறும் 3 முதல் 4 வாரங்களில் முடிந்துவிடும் என்று தான் முதலில் கூறிய போரை, ஏன் இன்னும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நாடாளுமன்றத்திற்கும், அமெரிக்கப் பொதுமக்களுக்கும் விளக்குவதில் ட்ரம்பிற்குப் பெரும் சிக்கல் ஏற்படலாம்.

அதே நேரத்தில், அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கி வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
ட்ரம்ப் தனது வெற்றியைப் பிரகடனப்படுத்தி, போர் முடிந்துவிட்டது என்று காட்டுவதற்காகவே இந்த அவசர ஒப்பந்தம் போடப்பட்டதாக அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் சிலர் கருதுகின்றனர்.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் சரத்துகளில், குறிப்பாக தற்போதைய புதிய மோதல்களின் மையப்புள்ளியாக விளங்கும் 'ஹோர்முஸ் நீரிணை' தொடர்பான விவகாரங்களில் சிக்கல்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan