தாய் மற்றும் சகோதரிக்கு இளைஞன் செய்த கொடூர செயல்
மொனராகல, வெல்லவாய பிரதேசத்தில் மகன் தனது தாயின் கையின் மூன்று விரல்களை மன்னா கத்தியால் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாயின் விரல்களை வெட்டிய மகன் தனது சகோதரியையும் கத்தியால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் விரல்கள் துண்டிக்கப்பட்ட தாயையும், காயமடைந்த சகோதரியையும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
ஆபத்தான நிலையில் இருந்த தாய் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மகன் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடையவர் எனவும் அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
